|
03/06/2007 - வைகாசி
20
அறிவைப்
போற்றும் ஆன்மீகச் சிந்தனை
நமது இல்லங்களில் குழந்தைப் பருவத்திலிருந்தே ஓர் ஒழுக்கம்
கற்றுத் தரப்படுகிறது. அது அவர்களின் கால்கள் காகிதம், புத்தகம்,
இசைக்கருவிகள் அல்லது கல்வி கற்பிக்கும் சாதனங்கள் ஆகியவற்றின்
மேல்படக்கூடாது என்பதாகும்.
தற்செயலாக பாதங்கள் பட்டு விட்டாலும் உடனே மன்னிப்புக் கோரும்
வகையில் பயபக்தியுடன் அப்பொருளைக் கைகளால் தொட்டு பின் கண்களைத்
தொடுதல் (ஒற்றிக்கொள்ளுதல்) வேண்டும்.
நமது நாட்டில் ஞானம் மிகவும் புனிதமான, தெய்வீகமான ஒன்றாகும்.
ஆகவே அது போற்றி வணங்கத் தக்கது ஆகும். தற்காலத்தில் பொருட்களைப்
புனிதமானவை, புனிதமற்றவை என்று பாகுபடுத்தியுள்ளோம்.
ஆனால் புராதன காலத்தில் நமது நாட்டில் ஆன்மீக தொடர்புடையவை அல்லது
உலக அறிவு சார்ந்தவையாக இருப்பவை ஆகிய அனைத்துமே தெய்வத்தன்மை
வாய்ந்தவையாகக் கருதப்பட்டன.
இவை சீடர்களுக்குக் குருவால் போதிக்கப்பட்டன. இந்திய
கலாச்சாரத்தில் அறிவுக்கு மிகவும் உன்னதமான மதிப்பு
அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் அறிவைப் புகட்டும் கருவிகளைக்
கால்களால் தீண்டக்கூடாது. இந்த விவேகமானது சிறுவயது முதலே
புத்தகங்களிடமும் கல்வியிடமும் ஆழ்ந்த பயபக்தியை வளர்க்கிறது.
-சுவாமினி விமலானந்தா
- ராதிகா கிருஷ்ணகுமார் |