|
19/05/2007 - வைகாசி 5
சுந்தர காண்டம்
படித்தால்..
சுந்தர காண்டம்
படித்தால் ராமாயணம் படித்த முழுப் பலனும் கிடைக்கும்..
சுந்தர காண்டத்தில் ஸ்ரீ ஹனுமான், சீதா பிராட்டியைத் தரிசனம்
செய்யும் சமயத்தில், ஸீதையோ சோகத்தின் உச்சத்தில் தன்னைத்தானே
மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றாள்.
அந்நிலையில், பிராட்டியின் மனதை மாற்ற ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீராமர்
ஜனனத்தில் தொடங்கி, தான் பிராட்டியைத் தரிசனம் செய்யும் கட்டம்
வரை சங்க்ரமமாக ராமாயணத்தைச் சொல்கிறார்.
விபீஷணனின் மகளான த்ரிஜடை
சீதாபிராட்டியிடம் தான் கண்ட கனவை வர்ணிக்கும் பொழுது ராமராவண
யுத்தம் நடப்பதையும், ராமர் ராவணனை வதம் செய்வதையும், பிராட்டி
ராமருடன் சேர்ந்து பட்டாபிஷேகம் நடப்பதையும் கண்டதாகக் கூறுகிறாள்.
எஞ்சியுள்ள ராமாயணம் இங்கு
சங்க்ரமமாக வந்து விடுகிறது.
எனவே சுந்தர காண்டம் பாராயணம் செய்வது ராமாயணம் முழுவதும்
பாராயணம் செய்த பலனைக் கொடுக்கும்.
|